×

கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றம்

மும்பை: கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். டேராடூன் மருத்துவமனையில் ரிஷப் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மேல்சிகிச்சைக்காக மும்பை மாற்றப்படுகிறார்.இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பந்த்-ன் கார், கடந்த மாதம் 30ம் தேதி டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் ரூர்க்கி எல்லைக்கு அருகில் சென்று கொண்டிருக்கும்போது கார்  விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். காயமடைந்த ரிஷப் பந்த் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.ரிஷப் பந்த் கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்று நிலையில், நேற்று முன்தினம் மாலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்….

The post கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மும்பை மருத்துவமனைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Rishop Bant ,Mumbai hospital ,Mumbai ,Dehratun Hospital ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்